Wednesday, July 21, 2010

கனவுத்தோழி!!!

இருவரும் தனிமையில்...

கருவிழிதனில் பிம்பம்
பரிமாறவில்லை;
கன்னம் கிள்ளிப்
பார்த்ததில்லை;
மூச்சுக் காற்று
புணர்ந்ததில்லை;
இதழில் முத்தங்கள்
பகிர்ந்ததில்லை;
மென் ஸ்பரிசம்
தீண்டியதில்லை;
தோள் சாய்ந்
துறங்கவில்லை;
கார்மேகக் கூந்தல்
கோதியதில்லை;
கடற் கரையில்
சந்தித்ததில்லை;
மடியில் தலைவைத்
துறங்க வில்லை;
விரல் பிடித்து
நடந்ததில்லை;
ரகசியமாய்
உரையாடிய தில்லை;
நிழல்கள் கூட
உரசியதில்லை;

கனவுகளால் அலங்கரித்து
நினைவுகளாய் நுழைந்து
நீ மட்டும்
என்னுள் உயிராய்க்
கரைந்த தெப்படி??

- ஜே கே

குறிப்பு : இருவரும் தனிமையில்...
எனும் தொடரை அனைத்து வரிகளின் முதன்மையாய் சேர்த்து படிக்கவும்!!!

சொப்பனம்!!!

நிஜங்களின் நகல்படமாய்
 நெஞ்சதனின் கற்பனையாய்
இன்பத்தின் இனிமையாய்
 துன்பத்தின் கொப்பளிப்பாய்
நினைவுகளின் கதம்பமாய்
 நிசப்தமான இரவுதனில்
நிம்மதியாய் நாமுறங்கும்
 வேளையில்; முட்களும்
பூக்களும் கலந்த
 அழகிய பூச்சரமாய்க்
கண்முன்னே நிகழ்வுகளாய்க்
 கோர்த்துக் காட்டும்
மாயக் கண்ணாடி!!!

Wednesday, July 7, 2010

தமிழ் எங்கள் செம்மொழி!!!

தரணியில் பிறக்கும்
பச்சிளங் குழந்தைகளின்
நாவினின்று கொஞ்சுதமிழாய்
சிந்தும் முதலொலி - 'த'னா;
தொல்மொழியான தமிழின்
முதலெழுத்து!!

தமிழ் - தம்மொழியென விளக்கம்
கூறும் இனிய மொழி;
வேறெந்த மொழியிளுமில்லா
'ழ'கரம் பேசும்;
முக்காலம் உணர்த்த
வினைத்தொகைக் கூறும்;
இருபொருள் கொடுக்கும்
ஓர் வார்த்தையாய்
சிலேடை பாடும்;

சிறுபிள்ளைக்கு
உயிரெழுத்துக்களின் அணிவகுப்பாய்
ஒழுக்கநெறி கற்றுத்தந்த
ஆத்திசூடி விளம்பும்;
உறவுகளின் உன்னதமுணர்த்த
ராமாயணமும்;
அறம் பொருள்
இன்பம் வீடுபேறு எனும்
நால்வகை நோக்கமுணர்த்த
மகாபாரதமும்; தன்னகத்தே
இரு இதிகாசங்களாய் உள்ளடக்கும்;

இல்லறத்தை நல்லறமாக்கச்
சிலப்பதிகாரம் சொல்லும்;
இரண்டடியில் வாழ்வியல்
உரைத்த வள்ளுவனின்
திருக்குறள் நம்
அறமோழியின் செம்மைபாடும்;
பாரெங்கும் தொன்மையைப்
பேணிக்காக்க சங்கம்
பலகண்ட தேசியமொழி;
ஆளுமையைச் செப்ப
தமிழ்நாட்டின் ஆட்சிமொழி
ஆனதெங்கள் பிள்ளைமொழி;

கண்டங்கள் தாண்டிச்
சீரோங்கி நிற்கும்
நாடுகளில் எம்தமிழர்
போற்றும் பேச்சுமொழி;
நம் தாய்மொழியாம்
தமிழுக்கு புகழாரம்
சூடும் செம்மொழி
மாநாடு வாழியவே!!!


பிரசுரம் செய்யப்பட்ட பதிவஞ்சல் : http://youthful.vikatan.com/youth/Nyouth/lakshmananpoem190610.asp