Sunday, December 27, 2009

யாரோ நீ !!!

உன் நகக் கீறல்களால்
எப்போதும்
கிழிந்தே இருக்கும் என் கனவு பக்கங்கள் !!!!

Friday, December 11, 2009

என் கவிதை!!!

என் கவிதைக்கு கூடவலிக்கும்
நீங்கள் உரக்க படித்தால்-
உயிரும் மெய்யும் கலந்து இருப்பதனால்!!!

Thursday, December 10, 2009

தாய் = பிரம்மா!!

என் தாயும்
ஒரு வகையில்
பிரம்மா தான் -
ஏனென்றால் அவன் கொடுத்த
உயிருக்கு இவள்
தன் கருவறையில்
உருவம் கொடுக்கிறாளே!!!!

காஞ்சிபுரம்...

பள்ளியறையில் விளையாடினால்
கருவறை!!!

இப்போதோ கருவறையே
பள்ளியறை?!!

Tuesday, June 30, 2009

Preview...

வெள்ளோட்டம் பார்க்கறோம்...
சில விடியலுக்குள் உங்கள் சிந்தனைக்கு விருந்து படைக்க வருகிறோம்....

Tuesday, June 23, 2009

சில்லரைகள்!!!

நடத்துநரிடம் கொடுப்பதற்காக
தானம் செய்ய
மனமிருந்தும்
பதுக்கி வைக்கிறேன்
என் பையில் இருக்கும்
சில்லரைகளை...