Thursday, November 25, 2010

இதய வெற்றிலை


என் இதய வெற்றிலையின்
ஓரத்தில் சுண்ணாம்பாய்
உனை தடவினேன்...
என் இதயம் முழுவதும்
சிவந்தது....காதலால்!!!

Tuesday, November 23, 2010

மனச்சலவை!!!

கடற்கரையில் 
மேடுகளாய் மணற்வீடுகள் ;
குழிகளாய் பல்லாயிரம்
மனிதகுலப் பாதச்சுவடுகள்;

சுழன்றடிக்கும் காற்றதனால்
படிந்திருக்கும்  மணற்பரப்புகள் -
நிலைத்திருக்கும் நேரமதோ
ஓர் இரவுதான்!!
அப்படியிருக்க நம்
மனக்கரையில் (மட்டும்)
தோரணங்களாய் புகழ்ச்சிகள்;
கரைச்சுவடுகளாய்
அன்றாட நிகழ்வுகள்;
உறவுகள் தரும் 
துன்பமதையும் நீக்கமற
நிலைபெறச் செய்து
வாழ்வியலை மாற்றிக்
கொள்வதேனோ???

தினம் தினம் நிகழும்
ஆனந்தத் தருணங்களால்
நம் மனக்கரைகளை
துடைத்தெறிவோமே!!

- ஜே கே

Monday, November 22, 2010

வேண்டுகோள்!!

அவளின் கண்முன்னே
வைப்பதென்றால்
அவன் சிற்பமாகக்கூட நிற்பான்!!
அவளின் கண்படாமல்
போவதென்றால்
அவன் சவமாய்ப் போவான்!!
அவளின் மென்விரல்கள்
தீண்டுவதென்றால்
அவள் பூக்களாய்ப் பூப்பான்!!
அவளின் விரல்படாமல்
போகுமென்றால்
அவள் மாக்களாய் மாறிப் போவான்!!
அவளின் பட்டுமேனி
தழுவுமேன்றால்
அவன் நூலிழையாய் மாறுவான்!!
அவளின் நினைவினின்று
விலகிப்போனால்
அவன் சந்தனமாய் இழைந்து தேய்வான்!!
ஆகவே அவன்
அவனாயிருக்க அவளைக்
காதலிக்கச் சொல்லுங்கள்!!!