அவளின் கண்முன்னே
வைப்பதென்றால்
அவன் சிற்பமாகக்கூட நிற்பான்!!
அவளின் கண்படாமல்
போவதென்றால்
அவன் சவமாய்ப் போவான்!!
அவளின் மென்விரல்கள்
தீண்டுவதென்றால்
அவள் பூக்களாய்ப் பூப்பான்!!
அவளின் விரல்படாமல்
போகுமென்றால்
அவள் மாக்களாய் மாறிப் போவான்!!
அவளின் பட்டுமேனி
தழுவுமேன்றால்
அவன் நூலிழையாய் மாறுவான்!!
அவளின் நினைவினின்று
விலகிப்போனால்
அவன் சந்தனமாய் இழைந்து தேய்வான்!!
ஆகவே அவன்
அவனாயிருக்க அவளைக்
காதலிக்கச் சொல்லுங்கள்!!!