Wednesday, January 27, 2010

கண்ணாடி உள்ளம்!!

உடைந்தே போகும் என தெரிந்தும்
உனையே நாடும் என் உள்ளம்-
உருகிப் போவோம் என தெரிந்தும்
ஒளி விடும் மெழுகைப் போல !!!

கலைந்தே இருந்தாலும்
என் மனதை கலைக்கிறதே
உன் கூந்தல்!!!

Thursday, January 21, 2010

நிழலின் சினம்!!!

என் நிழலும்
என்னிடம்
கோபம் கொள்கிறது
என்னை முந்தி
உன் நிழலை பின்தொடர
முடியவில்லையென்று!!!

உன் நினைவுகள்!!

இழுத்து இழுத்து போர்த்தினாலும்
சின்ன இடம் தேடி கடிக்கும் கொசுவை போல
கடித்திடும் உன் நினைவுகள் !!!

திருநங்கை = ஆண் -> ( ஆண் / 2 + பெண் / 2 )

பெண்ணே பெண்ணாய் வாழ
கடினப்படும் இப்பூவுலகில்-ஒரு
ஆணே பெண்ணாய் வாழ
முற்படுகிறானே - திருநங்கை(கள்)!!!

Wednesday, January 20, 2010

புரியாக்காதல்!!!

நான் என்னை
தந்த போது நீ
வாங்கவில்லை- நீ
உன்னைத் தர
வந்தபோது நான்
என்னிடமில்லையே!!!

Wednesday, January 13, 2010

தைப்பொங்கல்!!!

உழவனின் உழைப்பு - போற்றப்படும்
தமிழ் மறவனின் வீரம் - புகழப்படும்
சூரியனுக்கு நன்றி - உரைக்கப்படும்
தமிழனது புதுவருடம் - பிறக்கும்
கைகுத்தல் அரிசி புடையப்பட்டு
குயவனின் கைவண்ணத்தால் ஆன
வண்ணமிகு மண்பானையில் நம்
தமிழ் பண்பாடும்
தமிழனின் உள்ளமும்
தைமகள் பொங்கலென
பொங்கி வருவாள்!!!

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

Thursday, January 7, 2010

பொது நலம்!!

சுயநலக்காரனிடத்தும்
பொது நலத்தைக்
கண்டேன்
பேருந்து படிக்கட்டிலும்
மதுக்கடையிலும்!!!

Wednesday, January 6, 2010

'காக்கும் கரங்கள்'

தள்ளாடும் வயதில் காத்திடும் கரங்களாய் இருந்திடாப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூத்த குழந்தைகள் தஞ்சம் போகும் சரணாலயம் 'காக்கும் கரங்கள்' முதியோர் இல்லம் :( :(

Tuesday, January 5, 2010

பருத்தி கன்னம்!!!

நுண் பருத்தியின்
மென்மையை உணர
விரும்பியபோது
என்னவளின் கன்னத்தை தான்
தொட்டு பார்த்தேன்!!!

Monday, January 4, 2010

என்னவளே!!!

கைக்குழந்தையின் மென் விரல்களால்
தன ஸ்பரிசம் தீண்ட
விரும்பும் தாயினைப்போல்
என்னவளின் விரல் தீண்ட
காத்துக்கொண்டிருக்கிறேன்
ரொம்ப காலமாய் !!!