Wednesday, January 13, 2010

தைப்பொங்கல்!!!

உழவனின் உழைப்பு - போற்றப்படும்
தமிழ் மறவனின் வீரம் - புகழப்படும்
சூரியனுக்கு நன்றி - உரைக்கப்படும்
தமிழனது புதுவருடம் - பிறக்கும்
கைகுத்தல் அரிசி புடையப்பட்டு
குயவனின் கைவண்ணத்தால் ஆன
வண்ணமிகு மண்பானையில் நம்
தமிழ் பண்பாடும்
தமிழனின் உள்ளமும்
தைமகள் பொங்கலென
பொங்கி வருவாள்!!!

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment