
பத்து மாதம் தாண்டியும்
பிறவா குழந்தையாய்....
மென்று தின்று சுவை தீர்ந்த பின்பும்
மீண்டும் மீண்டும் மெல்ல தோன்றுவதாய்-இந்த
சொல்லா காதல்..
சொன்ன சில காதல் கூட
காமம் கரை ஏறி முடிந்து வடிந்து போகக்கூடும்.. இது
சொல்லா காதல்..
ஒவ்வொரு திருமணத்தின்
நாதசுரதுக்கு இடையே ஈனசுரமாய்!!!
இது செல்லா காதல் இல்லை
இதற்கு நல்ல முடிவுகளும் இல்லை!
என்றும் முடிவும் இல்லை!