Tuesday, November 23, 2010

மனச்சலவை!!!

கடற்கரையில் 
மேடுகளாய் மணற்வீடுகள் ;
குழிகளாய் பல்லாயிரம்
மனிதகுலப் பாதச்சுவடுகள்;

சுழன்றடிக்கும் காற்றதனால்
படிந்திருக்கும்  மணற்பரப்புகள் -
நிலைத்திருக்கும் நேரமதோ
ஓர் இரவுதான்!!
அப்படியிருக்க நம்
மனக்கரையில் (மட்டும்)
தோரணங்களாய் புகழ்ச்சிகள்;
கரைச்சுவடுகளாய்
அன்றாட நிகழ்வுகள்;
உறவுகள் தரும் 
துன்பமதையும் நீக்கமற
நிலைபெறச் செய்து
வாழ்வியலை மாற்றிக்
கொள்வதேனோ???

தினம் தினம் நிகழும்
ஆனந்தத் தருணங்களால்
நம் மனக்கரைகளை
துடைத்தெறிவோமே!!

- ஜே கே

1 comment:

  1. அவசியமான கருத்து, அழகான கவிதையில்!! ரசித்தேன்! சிந்தனைக்கு வாழ்த்துக்கள் JK :)

    ReplyDelete