Sunday, June 27, 2010

பிரிவு


கோபத்தில் தவறுகளை எண்ணும் மனது-
பிரிவுகளில் மட்டும் பாசத்தை வளர்கிறது...

மறத்தல்...மனங்களின் மரணம்
மன்னித்தல்....பிரிவுகளின் மரணம் என தெரிந்திருந்தும்
மறு முனையின் பதிலுக்காகவே காத்திருக்கும்...

பிரிவுகளின் ஏக்கத்தில்
கிழிந்தே இருக்கும் நான்..

Saturday, June 26, 2010

ரயில் பயணங்களில் -2


பச்சையாய், சிகப்பாய், நீலமாய், இருளாக
மாறி கொண்டேயிருக்கும் பின்னணி..

புகை வண்டியின் சதுர ஜன்னல்கள்...புகைப்பட சட்டமாய்...
ஒளிமிளிர் ஓவியமாய் நீ...

நீ கன்னத்தில் கை வைத்து அமர்ந்தாய்
என் உள்ளக் கப்பல் கவிழிந்தே போனது .....

Dedicated to the beautiful girl sat next to me in kovai express on 25Jun10,D10,seat no.79.

Tuesday, June 15, 2010

நினைவுச் சுவடுகள்...

பிரிந்து விட்ட போதும்
கடற்மணலில் புதைந்த
காலடித் தடங்களாய்
அவளின் நினைவுகள்
என் மனக்கரையில் !!!