நிஜங்களின் நகல்படமாய்
நெஞ்சதனின் கற்பனையாய்
இன்பத்தின் இனிமையாய்
துன்பத்தின் கொப்பளிப்பாய்
நினைவுகளின் கதம்பமாய்
நிசப்தமான இரவுதனில்
நிம்மதியாய் நாமுறங்கும்
வேளையில்; முட்களும்
பூக்களும் கலந்த
அழகிய பூச்சரமாய்க்
கண்முன்னே நிகழ்வுகளாய்க்
கோர்த்துக் காட்டும்
மாயக் கண்ணாடி!!!
No comments:
Post a Comment