Wednesday, July 21, 2010

சொப்பனம்!!!

நிஜங்களின் நகல்படமாய்
 நெஞ்சதனின் கற்பனையாய்
இன்பத்தின் இனிமையாய்
 துன்பத்தின் கொப்பளிப்பாய்
நினைவுகளின் கதம்பமாய்
 நிசப்தமான இரவுதனில்
நிம்மதியாய் நாமுறங்கும்
 வேளையில்; முட்களும்
பூக்களும் கலந்த
 அழகிய பூச்சரமாய்க்
கண்முன்னே நிகழ்வுகளாய்க்
 கோர்த்துக் காட்டும்
மாயக் கண்ணாடி!!!

No comments:

Post a Comment