இருவரும் தனிமையில்...
கருவிழிதனில் பிம்பம்
பரிமாறவில்லை;
கன்னம் கிள்ளிப்
பார்த்ததில்லை;
மூச்சுக் காற்று
புணர்ந்ததில்லை;
இதழில் முத்தங்கள்
பகிர்ந்ததில்லை;
மென் ஸ்பரிசம்
தீண்டியதில்லை;
தோள் சாய்ந்
துறங்கவில்லை;
கார்மேகக் கூந்தல்
கோதியதில்லை;
கடற் கரையில்
சந்தித்ததில்லை;
மடியில் தலைவைத்
துறங்க வில்லை;
விரல் பிடித்து
நடந்ததில்லை;
ரகசியமாய்
உரையாடிய தில்லை;
நிழல்கள் கூட
உரசியதில்லை;
கனவுகளால் அலங்கரித்து
நினைவுகளாய் நுழைந்து
நீ மட்டும்
என்னுள் உயிராய்க்
கரைந்த தெப்படி??
- ஜே கே
குறிப்பு : இருவரும் தனிமையில்...
எனும் தொடரை அனைத்து வரிகளின் முதன்மையாய் சேர்த்து படிக்கவும்!!!
Ya this blog only i have seen..
ReplyDeletewonderful man..
whos that JK