Tuesday, December 20, 2011

உன்விழியில் நான்!!!

உன் கருவிழியில்
என் பிம்பம்
காணும் அவ்வேளையில்....


காந்தம் கவர்ந்திழுக்கும்
இரும்புத் துகலாய்
உறைந்து போகிறதென்
நரம்பு மண்டலம்!!
வானம் பிளந்து
புவி தீண்டவரும் வண்ணமில்லா
நீர்க்குமிழி போல்
தாவிக்குதிக்கிறதென் மனம்!!
மகரந்தம் தேடி
படபடவென சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சி போல்
தன் துடிப்பெண்ணிக்கையை
கூட்டுகிறதென் இதயம்!!
கருவண்ண கார்மேகம் தனை
மழைக்கு முந்திவரும்
வானவில் போல்
உருவமில்லா ஓருணர்வு
பெருக்கமதனில் திலைக்கிறதென்
நெஞ்சுக்குழி!!
முட்களின் அரவணைப்பினும்
தன் செவ்விதழ்களால்
மனம் களவாடிய
ரோஜாப்பூ போல்
என் இன்பத்தருணம்
விளம்பும் உன்னிதழ்
ரேகை தீண்ட
துடிக்கிறதென் இதழ்கள்!!
கடல் தாவிவரும்
பால்வண்ண அலையினைப்போல்;
ஓடுடைத்து வந்து
வான்வெளி தொடத்
துடிக்கும் குஞ்சுப்
பறவைகள் போல்;
பிறவிப்பயன் தீர்க்க
தம்மிதழ் விரிக்கும்
மென்னிய பூக்குவியல் போல்;
கட்டவிழுந்து நிலம்
தாவும் கன்றினைப்போல்
என்னுலகம் ஆனந்தத்
தாண்டவம் ஆடுவதேனடி தோழி!!

No comments:

Post a Comment