கருவறையில் நான்கிடந்த
பத்து திங்களும்
நின்னக்கறையில்
உயிர் வளர்ந்தேனே;
நிலம்தவழ்ந்த அந்நாளில்
செவிலித்தாயிடம் என்னைப்
பெற்றபோது பெருமிதம்
கொண்ட பாசமிக்கோனே;
உன்னாண்மை விளம்பும்
மீசையென் கன்னம்
கிழித்திட தேம்பி
அழுத எனக்காய்
மழித்திட்ட வாலிபனே;
பயணங்களில் சோர்வுராமலிருக்க உம்
தோள்களையும் துயிலுறங்கையில்
நெஞ்சமதைப் பஞ்சனையாய்
வார்த்திட்ட வயோதிகனே;
பள்ளிப் பருவமதில்என்
தேவை நிவர்த்தி செய்து
கனிவாய்ப் பேசி என்னிடம்
முத்தம் வாங்கும்
கலையில்நீ வல்லவனே;
உன்னுழைப்பின் வெகுமதியாம்
ஊதியமதனின் பெரும்பகுதியை
எம்முக மலர்ச்சிக்காய்
செலவு செய்திட்ட
செருக்கொழித்த சேவகனே;
தாயவளின் அடியிலிருந்தும்
வசையிலிருந்தும் காத்துக்
கண்டிப்புடன் எந்தவறைச்
சுட்டிக்காட்டி நேர்வழிப்
படுத்தும் ஆசானே;
நன்வாலிபனாய்(நற்பெண்ணாய்) நான் வளர
நன்னெறி உரைத்து
நல்வழி நல்கும்
நேசமிக்க நண்பனே;
பின்னாளில் எம்வாழ்வு
நிம்மதியாய் இருந்திட
உம் இந்நாள் மகிழ்ச்சியை
தியாகம் செய்த தீர்க்கதரிசியே;
உம் வாழ்நாள் அனுபவமதை
எம் நினைவில் படிப்பினையாக
வாழ்ந்திட்ட வித்தகனே;
பின்னாளில்...
எம்மன்பும் அரவணைப்பும்
பிரதிபலனாய் எதிர்பாராமல்
இந்நாளில்...
உம் கடமையைச்
செய்யும் கண்ணியமானவனே;
உம்பிறவிப் பேறதனை
எந்நாளும் நிலைபெறச்
செய்திட எம்முயிருள்ளவரை
வாழ்வேனென உறுதியளிக்கிறேன்
எம் தந்தையே!!!
பத்து திங்களும்
நின்னக்கறையில்
உயிர் வளர்ந்தேனே;
நிலம்தவழ்ந்த அந்நாளில்
செவிலித்தாயிடம் என்னைப்
பெற்றபோது பெருமிதம்
கொண்ட பாசமிக்கோனே;
உன்னாண்மை விளம்பும்
மீசையென் கன்னம்
கிழித்திட தேம்பி
அழுத எனக்காய்
மழித்திட்ட வாலிபனே;
பயணங்களில் சோர்வுராமலிருக்க உம்
தோள்களையும் துயிலுறங்கையில்
நெஞ்சமதைப் பஞ்சனையாய்
வார்த்திட்ட வயோதிகனே;
பள்ளிப் பருவமதில்என்
தேவை நிவர்த்தி செய்து
கனிவாய்ப் பேசி என்னிடம்
முத்தம் வாங்கும்
கலையில்நீ வல்லவனே;
உன்னுழைப்பின் வெகுமதியாம்
ஊதியமதனின் பெரும்பகுதியை
எம்முக மலர்ச்சிக்காய்
செலவு செய்திட்ட
செருக்கொழித்த சேவகனே;
தாயவளின் அடியிலிருந்தும்
வசையிலிருந்தும் காத்துக்
கண்டிப்புடன் எந்தவறைச்
சுட்டிக்காட்டி நேர்வழிப்
படுத்தும் ஆசானே;
நன்வாலிபனாய்(நற்பெண்ணாய்) நான் வளர
நன்னெறி உரைத்து
நல்வழி நல்கும்
நேசமிக்க நண்பனே;
பின்னாளில் எம்வாழ்வு
நிம்மதியாய் இருந்திட
உம் இந்நாள் மகிழ்ச்சியை
தியாகம் செய்த தீர்க்கதரிசியே;
உம் வாழ்நாள் அனுபவமதை
எம் நினைவில் படிப்பினையாக
வாழ்ந்திட்ட வித்தகனே;
பின்னாளில்...
எம்மன்பும் அரவணைப்பும்
பிரதிபலனாய் எதிர்பாராமல்
இந்நாளில்...
உம் கடமையைச்
செய்யும் கண்ணியமானவனே;
உம்பிறவிப் பேறதனை
எந்நாளும் நிலைபெறச்
செய்திட எம்முயிருள்ளவரை
வாழ்வேனென உறுதியளிக்கிறேன்
எம் தந்தையே!!!
No comments:
Post a Comment