Wednesday, March 3, 2010

என்னவளே!!!

நெற்றியில் சுருக்கம் பிடிக்கும்;
          சுருக்கத்தின் மத்தியில் சிறுபொட்டு பிடிக்கும்;
கண்ணின் கருவிழி பிடிக்கும்;
          கருவிழி காத்திடும் இமையிரண்டு பிடிக்கும்;
முகத்தில் சிறுமூக்கு பிடிக்கும்;
          மூக்குமேல் மின்னலாய் கல்மூக்குத்தி பிடிக்கும்;
செவ்விதழ் போலிரு உதடுகள் பிடிக்கும்;
          உதட்டின் ஓவியமாய் சிறுவெடிப்பு பிடிக்கும்;
குயில்போல் குரல் பிடிக்கும்;
          குரலின் பேசும் செந்தமிழ் பிடிக்கும்;
சங்குபோல் கழுத்து பிடிக்கும்;
          கழுத்தில் காவியமாய் கருமணி பிடிக்கும்;
இடையைத் தொடுகின்ற கூந்தல் பிடிக்கும்;
          கூந்தலின்று வீசும் நறுமணம் பிடிக்கும்;
சினத்தில் சிவக்கும் கன்னம் பிடிக்கும்;
          கன்னத்தில் விழும் சிறுகுழி பிடிக்கும்;
மென்னிய விரல்கள் பிடிக்கும்;
          விரல்கள் தீண்டுகையில் ரசிக்கப் பிடிக்கும்;
வாழைபோல் கால்கள் பிடிக்கும்;
          கால்களைத் தழுவும் சிறுகொலுசு பிடிக்கும்;
அன்னமதை ஒத்த மெல்லிடை பிடிக்கும்;
          இடையைத் தழுவும் உடைகள் பிடிக்கும்;
நெற்றிமேல் வகிடு பிடிக்கும்;
          வகிடு மறைக்கும் நெற்றிச்சுட்டி பிடிக்கும்;
வளைந்த செவிகள் பிடிக்கும்;
          செவிகள் தாங்கும் ஜிமிக்கி பிடிக்கும்;
முத்துபோல் பற்கள் பிடிக்கும்;
          பற்கள் சிந்தும் சிறுபுன்னகை பிடிக்கும்;
நித்திரையில் கனவு பிடிக்கும்;
          கனவு கலைக்கும் உன்னினைவுகள் பிடிக்கும்;
கோபத்தில் மௌனம் பிடிக்கும்;
          மௌனம் கலைக்கும் புன்சிரிப்பு பிடிக்கும்;
உன்னிழலாய் நானிருந்திட பிடிக்கும்;
          உயிரே உன்னை ரொம்பப் பிடிக்கும்!!!

No comments:

Post a Comment