விதியென இணைந்து
நம் மனதளவில் மட்டும்
முக்கியமென நினைத்திட்ட
ஒருவருடன் ஒன்றாய்
வாழ்ந்தால் மட்டும்தான் நம்
வாழ்க்கை அழகாகும் என்றில்லை!
நம்மையும் பூரண
மனதோடு விரும்பி
நமது மன ஓட்டங்களையும்
முழுமையாக புரிந்துகொண்டு
நாமே முக்கியமென்று நினைத்து
நமது ஆசைகள் யாவற்றையும்
நிறைவேற்ற முயற்சிக்கும்
ஒருத்தர் கூட வாழும்பொழுதே
வாழ்க்கை சொர்க்கம் ஆகிடாதோ!
No comments:
Post a Comment