நம்பிக்கை - இனி நடக்கப் போகும்
அனைத்திற்கும் நெஞ்சுரம் பெருக்கும்!
துரோகம் - இன்று வரை நடந்தவை
யாவிற்கும் ஆழ்மனதின் வேரைப் பிளக்கும்!
நம்பிக்கை தைரியம் கற்றுத் தரும்!
துரோகம் கண்ணீர் வரவழைக்கும்!
ஆறாத வடுவாக நெஞ்சில் நிலைத்தாலும்
இதயத்தை இரு கூறாக்கும் வேதனையை
மீண்டும் மீண்டும் அனுபவித்தாலும்
துரோகம் தந்த வலிகள் யாவும்
படிப்பினைகளாய் பதிந்து நிற்கும்!
என்றாவது ஒருநாள் நிலைமை மாறும்
நம் வாழ்வில் இதுவும் கடந்து போகும்
என்ற திண்ணமே நம்பிக்கை அன்றோ!
No comments:
Post a Comment