தினந்தோறும் என்னை புதுப்பித்துக்
கொள்கிறேன் எனக்காக அல்லவே!
நான் எப்போது வீழ்வேன் என்று
ஏங்கிக் கிடக்கும் விஷமிகளுக்காக!
நான் இன்னும் வீழ்ந்திடவில்லை என்று
நம்பிக்கையூட்டும் நலம் விரும்பிகளுக்காக!
வஞ்சத்தாலும் துரோகத்தாலும் சற்று
இடரித்தான் விழுந்து கிடக்கிறேனே தவிர
மண்ணில் புதையுண்டு விடவில்லை!
தைரியமும் மனதிடமும் உற்சாகமாய்
தலைதூக்கிப் பார்க்கிறது புதுப்பிக்கப்பட்ட
என் முகத்தை நிழல் பிம்பமாகக் காணும்போது!
மீண்டு வருவேன் உங்கள் எல்லோர் முன்பும்
விருட்சமாக வளர்ந்து மீண்டும் வாழ்ந்திடுவேன்!
No comments:
Post a Comment