Thursday, June 22, 2023

சுயமரியாதை Vs அன்பு!

கூடியிருந்தவர்கள் விலகும் போது

சுயமரியாதை வென்றால் அன்பு ஒழியும்!

பிரிந்தவர்கள் மீண்டும் கூடும் போது

அன்பு மேலோங்கினால் சுயமரியாதை தோற்கும்!

சுயமரியாதை நம்மை மட்டும் சார்ந்தது

எந்த உறவையும் அறுக்கத் தயங்காது!

அன்பு நம்மையும் சுற்றத்தையும் சார்ந்தது

இழந்த உறவையும் பிரிந்திட நினைக்காது!

சுயமரியாதை நம்மைத் தனிமைப்படுத்தும்!

அன்பு நம்மை கூட்டத்தோடு இணைக்கும்!

சுயமரியாதையை சற்றே விட்டுக் கொடுத்தால்

அன்பு நம்மை ஆரத்தழுவி அரவணைக்கும்!

No comments:

Post a Comment