Friday, February 26, 2010

வேதியல் மாற்றம்


உன் காதலைச் சொல்லிவிட்டு
என் உதட்டில் இருந்து நீ முத்தங்களைத் திருடிச் சென்ற
நொடி பொழுதில் எறும்புகள் மொய்க்கும்
கற்கண்டு சிலை ஆகி போனேன் நான் !!

விண்ணை தாண்டி வருவாயா


காதலே கண் முன்னே கவிதையாக!
கவிதையே கண் முன்னே காதலாக !!!!

Wednesday, February 24, 2010

நிஜ வருத்தம்!!

அவள்மீது
கோபமென்றால் ஏன்
எங்களை தரையிறங்கி
ஊர்வலம் போகச்
சொல்கிறாய் - (நான்
உடைத்தெறிந்த) கதவுத்
தாழ்பாள்கள்!!

காதல் கண்ணாமூச்சி!!

விழிகள் மோதிடாக் காதல்; 
விழிகள் கலந்துறவாடுங் காதல்; 
தேகம் தீண்டாக் காதல்; 
இருளில் நிறம் மாறுங் காதல்; 
காமம் தேடுங் காதல்; 
நிழல்கள்மட்டு முரசுங் காதல்; 
முகங்கண்டு மலர்ந்த காதல்; 
சினங்கொண்டு பிரிந்த காதல்; 
ஊனம் மறந்த காதல்; 
அகங்கண்டு மலர்ந்த காதல்; 
புன்னகயிலூற் றெடுத்த காதல்; 
நட்புதடம் பெயர்ந்த காதல்; 
நட்பால் முறிந்த காதல்; 
உறவுகள் சேர்த்(ந்)த காதல்; 
உறவு கள்தட மாறிய காதல்; 
கல்லறை யில்புதை யுண்ட காதல்; 
சில்லறை யால்சிதை யுண்ட காதல்; 
மதஇனவேறு பாடில்லா காதல்; 
மனங்களுக்காய் மதமாறிய காதல்; 
பாலினவேறு பாடில்லா காதல்; 
பெற்றோரின் பாசமறந்த காதல்; 
பாசமிகுதியால் சந்தேகமுற்ற காதல்; 
அனுபவமில்லா பள்ளிக் காதல்; 
அனுபவமுற்ற மூத்த காதல்; 
பல்லுருவாய் காதல் ஒளிந்திருக்க 
என்னுடன் மட்டுங் 
கண்ணாமூச்சி ஆடுவதேனோ!!

Monday, February 22, 2010

கண்ணாடிக் குட்டிகள்!


நீ என் வீட்டிற்கு வரும் போதெல்லாம்
முகம் பார்க்கும் கண்ணாடியை தரையில் தவற விடுவேன்-
உன் ஒரு பிம்பம் போதாது எனக்கு-
தரை முழுதும் வண்ண கோலமாய் நீ !

என் அம்மா!!!



என் கவிதைக்கெல்லாம் முதல் ரசிகை!
கசக்கி எறிந்த காகிதங்களை எல்லாம் சேர்த்து வைத்தவள்!

இன்றோ என் கவிதைகள் எல்லாம் பத்திரமாக...
ஆனால் நீ மட்டும் ஏனோ காற்றோடு கற்பூரமானாய்......

Saturday, February 20, 2010

நீ கவிதை!!


உன்னை பற்றி கவிதை சொல்கிறேனே
நீ என்னை பற்றி கவிதை சொல்லேன் என்றேன் ஒரு நாள்!
மறு நாள் வந்து மனனம் செய்த
தபுசங்கர் கவிதையை தடுமாறி தடுமாறி ஒப்பித்தாய்-
நீ என் கண் முன்னே குழந்தை ஆனாய்!!!
மனதினுள்ளே கவிதை ஆனாய்!!!!

குறுக்கீடு


உன்னுடைய குறுஞ்செய்திக்காகவும்
அழைப்புக்காகவும் காத்திருக்கும் போதெல்லாம்
ஏமாற்றவே வருகிறது
அலைபேசியின் வர்த்தக அழைப்புகள் !!!

மன சிலந்தி


தேர்ந்த கைத்தறிக் கலைஞனின்
வீட்டைக் கலைப்பதாய்த் தோன்றும்
ஒவ்வொரு சிலந்தி வலையை
அழித்திடும் போதும் !!!!!

Friday, February 19, 2010

விக்கலில் சிக்கிய கவிதை


முன்னொரு நாளில் நாம் சேர்ந்து உண்ணும் பொழுது
விக்கியபடியே சொன்னாய்-'யாரோ நினைக்குறாங்க'
அப்படியானால் நீ காலம் முழுதும்
விக்கியயபடியே இருந்திருக்க வேண்டுமே-
என்னால்!!!

Thursday, February 18, 2010

தழும்பு..


இன்றுவரையென் அத்துணை
விண்ணப்பத்திற்கும் அங்க
அடையாள மானதென்
நண்பன் பள்ளிப்பருவத்தில்
உண்டாக்கிய நெற்றிக்காயம்!!

சிந்தனை செய்!!!


மனித அறிவினின்று
சற்றே விலகி சிந்திக்கும்
ஜீவனுக்கு பெயர்கள் இரண்டு -
ஒன்று விஞ்ஞானி
மற்றொன்று பைத்தியக்காரன் :(

Tuesday, February 16, 2010

ஏக்கம்!!


குடைபிடிக்க
யாருமில்லையென்று
கண்ணீர் சிந்துகின்றன
மழையால் நனைந்த
இலைகளும் பூக்களும்!!!

Saturday, February 13, 2010

பிப் 14

இதயத்தின் நாளங்களில் எல்லாம் புது ரத்தம் பாயும்
மூளைக்குள் மின்மினி பூச்சிகள் கூடு கட்டும்
கிறுக்கல்கள் கூட கவிதையாய் மாறும்
அதிசயம் காதலில் மட்டுமே நிகழும் !!!!!!

Thursday, February 11, 2010

நெருங்கிய நண்பன்..

நாம் பகைத்துக்
கொள்ள முடியாநம்
அந்தரங்கம் அறிந்த
ஒரே எதிரி - நண்பன்!!!

Friday, February 5, 2010

இருள் மனங்கள்!!!

மாரி பொழியவே
கரு மேகங்கள் தான்
ஒன்றுகூட வேண்டியிருக்கிறது -
என் மனித மனத்தில் தான்
கருமையை வெறுக்கும்
எத்தனை நிறங்கள்!!!!

நிலவே பெண்ணாய்!!!

நிலவின் காலூன்றி
நிற்கவே முடியவில்லையாம் - ஆனால்
நிலவிற்கே சேலை கட்டி
அழகு பார்க்கும்
வரம் வாங்கி வந்திருக்கிறாள்
என்னவளின் தாய்!!!!

நவீன யூதாஸ்!!!

என்னவளின் கைவளையும்
கால்கொலுசும் யூதாஸ்களாயின -
அவள் வருவதை என்னிடம்
காட்டிக்கொடுத்தபோது!!!

கொம்புத்தேன்!!

எட்டாக் கனியென
அறிந்தும் கொய்ய
முயலும் முடவர்களானர் -
வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
என் இளைய சமுதாயம்!!!

நிலாப்பெண்ணே !!!

என்னவளும் என்னிடம்
கோபம் கொள்கிறாள்
அவளை விடுத்து
நிலவின் அழகை
பாடுகிறேனென்று -
எப்படி உணர்த்துவேன்
அவள் தான்
என் முழுநிலவென்று!!!!

Wednesday, February 3, 2010

இனி ஒரு விதி செய்வோம்...

இனி
யுத்தங்கள் வேண்டாம்...
முத்தங்கள் செய்வோம்!!!

Tuesday, February 2, 2010

ஓர் இரவு

உயிர் ஒன்று தனக்காய்
உருகும் ஓசைக் கூட அறியாமல்
உணர்வுகளுக்கே உணர்வில்லாமல்
உறங்குகிறாள் ஒருத்தி....எங்கோ!!!