வறுமையில் பிறப்பினும்
கல்வியில் சிறக்காவிடினும்
வாலிபம் தொட்டவுடன்
கடனுக்காவது பணம்வாங்கி
மனுதாக்கல் செய்து
வாக்குறுதிகளைப் போட்டு
தெளிவான மக்கள்
மனதில் ஆசைகளை
திணித்து ஓட்டுகள் எனும்
மீன்கள் பிடித்து
வெற்றிக்கனி ருசித்தபின்
தொண்டர்களின் பாராட்டலில்
குதூகலமாய் பயணித்து
உற்றார் உறவுகளை
கரையேற்றி; வளர்ந்திடும்
பரம்பரைக்கு அதீத
செல்வம் சேர்க்கும்
ஜோலியில் குற்றங்களின்
தலைநகரமாய் தம்தொகுதியை
உருவாக்கிட முற்பட்டு
சமூக சேவை மறந்து
சட்டத்திற்கெதிராய் ஐந்தாண்டு
நமக்கென உழைத்திட்டு
தம்மிறுதி படுக்கையில்
அரசியலுக்காய் தன்வாழ்வை
அர்பணித்த தியாகியென
மக்களே கொண்டாடிடும்
புனிதர்கள் அல்ல
பூலோக தெய்வப்பிறவிகள்!!
No comments:
Post a Comment