அழகு பார்த்து வருவது
பாலின ஈர்ப்பு என்பேன்;
ஆண்மை பார்த்து வருவது
வலிமையின் ஈர்ப்பு என்பேன்;
பணம் பார்த்து வருவது
வறுமையின் கொடுமை என்பேன்;
அதீத செல்வத்தில் வருவது
பேராசையின் நீட்சி என்பேன்;
அனுதாபம் கொண்டு வருவது
இரக்கத்தின் நீட்சி என்பேன்;
ஆறுதல் சொல்ல வருவது
விரக்தியின் முடிவு என்பேன்;
நட்பு பாராட்டி வருவது
நம்பிக்கையின் நீட்சி என்பேன்;
சுற்றம் பார்த்து வருவது
தனிமையின் தகிப்பு என்பேன்;
அன்பின் இணைப்பில்
ஆழமான புரிதலில்
இணக்கமான நெருக்கத்தில்
ஈகையின் இன்பமதனில்
உளம் கொண்டாடும்
ஊடுருவரலில்லா பிணைப்பில்
எந்நேரமும் நினைவுகளோடு
ஏதுமறியா மழலைபோல்
ஐயமின்றி பாசத்துடன்
ஒருநாளும் பிரிவுராமல்
ஓய்ந்திடாத கடிகாரமாய்
உன்பால் நானும்
என்பால் நீயும்
உன்னதமான முறையில்
உணர்வுகள் ஒத்தநிலையே
காதல் என்பேன்!!!
No comments:
Post a Comment