Wednesday, November 18, 2020

நம்பிக்கை துரோகம்!!

உணர்வுகளால் வேரிட்டு

நினைவுகளால் நிறைத்து

உதடுகளால் உளம் அறுத்தாய்!!

அன்பினால் உறவுகளைப்

பெற நினைத்த என்னை

பொறாமையெனும் தீப்பிழம்பில்

மனம் எரியச் செய்தாய்;

பாசசங்கிலியில் இணைத்து

கூட்டுக்குருவிகளாய் வாழ

நினைத்த எனக்கு


தனிமையே நிம்மதியெனும்

தாரக மந்திரம் போதித்தாய்;

உலகமே அமைதிக்காய்

போராடும் வேளையில்

நான்மட்டும் போர்க்கொடி

உயர்த்துகிறேன் உனக்கெதிராய்;

உன்னுடன் உலகைப்

புதிதாய்க் கண்டு ரசிக்க

நினைத்த எனக்கு

உறவினர்களும் அந்நியமாய்ப்

போகச் செய்திட்டாய்;

உன் துன்பங்களுக்கு

கலங்கிட்ட எனது கண்களை

கபடமென்று சொல்லி

அன்பின் வேரறுத்தாய்;

உயிர் பிரியும் வேளையில்

வாழுங்கலையை ஆழ்மனதில்

விதைத்திட்ட என்மீது

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பிரகடனப் படுத்தினாய்;

உன் நாவினின்று

உதிரும் சொற்களுங்கூட

நெஞ்சம் கிழித்து

குருதி உறையச்செய்யும்


வல்லமை படைத்திட்டாய்;

உணர்வுகளால் வேறிட்டு

நினைவுகளால் நிறைத்து

உதடுகளால் உளம் அறுத்தாய்!

No comments:

Post a Comment