Wednesday, November 18, 2020

​​தனிமை!!

விரக்தியில் தைரியம்

சொல்லித் தந்தது;

மனவலிமை வளர்த்திட

கற்றுத் தந்தது;

உறவுகளின் உன்னதம்

விளங்கிடச் செய்தது;

வார்த்தைகளின் வீரியம்

புரிந்திட வைத்தது;

புன்னகையின் மேன்மை

உணரச் செய்தது;

மரண விருட்சத்தை

மனதில் விதைத்தது;

தலைக்கனம் கூட்டிடும்

செருக் கொழித்தது;

நட்பின் பின்புலம்

அறிந்திடச் செய்தது;


தனக்கெனத் துணைதேடும்

மானுடத்தில் என்

தனிமை உணர்ந்திட

எவரேனும் உளரோ??

No comments:

Post a Comment