விரக்தியில் தைரியம்
சொல்லித் தந்தது;
மனவலிமை வளர்த்திட
கற்றுத் தந்தது;
உறவுகளின் உன்னதம்
விளங்கிடச் செய்தது;
வார்த்தைகளின் வீரியம்
புரிந்திட வைத்தது;
புன்னகையின் மேன்மை
உணரச் செய்தது;
மரண விருட்சத்தை
மனதில் விதைத்தது;
தலைக்கனம் கூட்டிடும்
செருக் கொழித்தது;
நட்பின் பின்புலம்
அறிந்திடச் செய்தது;
தனக்கெனத் துணைதேடும்
மானுடத்தில் என்
தனிமை உணர்ந்திட
எவரேனும் உளரோ??
No comments:
Post a Comment