Wednesday, November 18, 2020

கர்மவீரர் காமராஜர்!!!

விருதுநகரில் பிறந்து

தமிழகம் வளர்த்திட்ட

வானுயர்ந்த விருட்சகமே;

பள்ளிப் படிப்பில்லை

யெனினும் குலக்கல்வி

ஒழித்து - மூடிய பள்ளிகள்பல

திறந்து பாலர் பலருக்கு

கல்விக்கண் திறந்த

கருணைக் கல்வியாளரே;

ஏழ்மையை மறக்க

கற்கும் பிள்ளைகளுக்கு

மதிய உணவுத்திட்டம்

தந்தருளிய மாமனிதரே;

பன்னாறு வயதில்

அரசியல் இயக்கம்

பிரேவேசித்த ஆட்சியாளரே;

பன்முறை சிறைசென்றாலும்

சுயமாய்க் கற்று

நாடுயரப் பாடுபட்டப்

பகுத்தறிவுப் பகலவரே;

உன்னாட்சி மலர்ந்திட்ட

ஒன்பது வருடங்களும்

தமிழகம் கண்ட பொற்காலமே;

உன்னவையில் உயிர்பூத்த

தொழிலகங்கள் அணைகள்

செம்மையாய் இன்றும்

உன்னெழில் செப்புகின்றன;

பதவிப் பகட்டில்

பணம்புரட்டும் அரசியல்

முதலைகளின் நடுவே

நேர்மையாய் வாழ்ந்திட்ட

நெட்டான நெறியாளரே;

உன் எளிமையால்

எங்களுள்ளம் கவர்ந்த


மக்கள் தொண்டரே;

உன்னினைவைப் பாராட்டும்

எங்களிளைய சமுதாயம்

சமர்ப்பிக்கும் பிறந்தநாள்

வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment