விருதுநகரில் பிறந்து
தமிழகம் வளர்த்திட்ட
வானுயர்ந்த விருட்சகமே;
பள்ளிப் படிப்பில்லை
யெனினும் குலக்கல்வி
ஒழித்து - மூடிய பள்ளிகள்பல
திறந்து பாலர் பலருக்கு
கல்விக்கண் திறந்த
கருணைக் கல்வியாளரே;
ஏழ்மையை மறக்க
கற்கும் பிள்ளைகளுக்கு
மதிய உணவுத்திட்டம்
தந்தருளிய மாமனிதரே;
பன்னாறு வயதில்
அரசியல் இயக்கம்
பிரேவேசித்த ஆட்சியாளரே;
பன்முறை சிறைசென்றாலும்
சுயமாய்க் கற்று
நாடுயரப் பாடுபட்டப்
பகுத்தறிவுப் பகலவரே;
உன்னாட்சி மலர்ந்திட்ட
ஒன்பது வருடங்களும்
தமிழகம் கண்ட பொற்காலமே;
உன்னவையில் உயிர்பூத்த
தொழிலகங்கள் அணைகள்
செம்மையாய் இன்றும்
உன்னெழில் செப்புகின்றன;
பதவிப் பகட்டில்
பணம்புரட்டும் அரசியல்
முதலைகளின் நடுவே
நேர்மையாய் வாழ்ந்திட்ட
நெட்டான நெறியாளரே;
உன் எளிமையால்
எங்களுள்ளம் கவர்ந்த
மக்கள் தொண்டரே;
உன்னினைவைப் பாராட்டும்
எங்களிளைய சமுதாயம்
சமர்ப்பிக்கும் பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!!!
No comments:
Post a Comment